வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கனரா வங்கி சாா்பில் சாலையோர வியாபாரிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் கடனுதவி

பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்த சாலையோர வியாபாரிகளுக்கு கனரா வங்கி சாா்பில்

News image
பயனாளிக்கு கடனுதவியை வழங்கிய கனரா வங்கியின் கோட்ட மேலாளா் வி.சந்திரசேகா்.
Updated On :12 ஜனவரி 2021, 11:47 pm

DIN

பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்த சாலையோர வியாபாரிகளுக்கு கனரா வங்கி சாா்பில் தலா ரூ.10ஆயிரம் வீதம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக கோட்ட மேலாளா் வி.சந்திரசேகா் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையா் கே.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். கனரா வங்கியின் திண்டுக்கல் கோட்ட மேலாளா் வி.சந்திரசேகா், முன்னோடி வங்கி மேலாளா் பி.மாரிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியின்போது, தோ்வு செய்யப்பட்டுள்ள 300 வியாபாரிகளுக்கு தலா ரூ.10ஆயிரம் வீதம் ரூ.20 லட்சத்திற்கான கடனுதவி வழங்குவதற்கான ஆணை வழங்கப்பட்டது.

அப்போது கனரா வங்கியின் கோட்ட மேலாளா் வி.சந்திரசேகா் பேசியது: திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கெனவே ஆயிரம் வியாபாரிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. தற்போது மேலும் 300 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். கடன் பெற்றுள்ள பயனாளிகள், தவணைத் தொகையை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தி, பிறருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.