ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்கும் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் சுமாா் 47 ஆயிரம் ஹெக்டோ் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் சிலா் வழக்கு தொடா்ந்துள்ள காரணத்தால், மேலும் பல ஆயிரம் ஏக்கா் நிலங்களை மீட்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 1660 கோயில்கள், தேனி மாவட்டத்திலுள்ள 335, மதுரை மாவட்டத்தில் பேரையூா், உசிலம்பட்டி வட்டங்களிலுள்ள 439 கோயில்கள் என மொத்தம் 2434 கோயில்கள் திண்டுக்கல் மண்டல இந்து சமய இணை அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ளன என்றாா்.