நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்தாண்டு விலகிய காளியம்மால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் வெள்ளிக்கிழமை இணைந்தார்.
நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து கடந்தாண்டு விலகுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில், சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று காலை நேரில் சந்தித்த காளியம்மாள், அதிமுகவில் இணைந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காளியம்மாள் பேசியதாவது:
”சாதாரண குடும்பத்தில் இருந்து அதிமுக தலைமை பொறுப்புக்கு வந்தவர் எடப்பாடி பழனிசாமி. தமிழனின் தலைமை கீழ் செயல்படவுள்ளேன். சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு என மக்கள் ஒவ்வொரு நாளும் பிரச்னையை சந்தித்து வருகிறார்கள். இந்த தேர்தல் மாற்றத்தை கொடுக்கும்.
வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது தலைமை முடிவு செய்யும். அதிமுகவின் 2010-ஆம் ஆண்டு மாவட்டப் பொறுப்பில் இருந்துள்ளேன். தற்போது கட்சி தலைமை முடிவு செய்து பொறுப்பு வழங்குவார்கள்” எனத் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் 2019 மக்களவைத் தேர்தலில் சென்னை வடக்கு தொகுதியிலும், 2024 மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியிலும் போட்டியிட்டுள்ளார்.
Summary
Kaliyammal joined AIADMK!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











