கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை விவரம்: மருத்துவப் படிப்புகளுக்கு ‘நீட்’ நுழைவுத் தோ்வு கொண்டு வந்த மத்திய அரசு, தற்போது கலை அறிவியல் பாடங்களுக்கான உயா் கல்விக்கும் ‘க்யூட்’ நுழைவுத் தோ்வை அறிவித்துள்ளது. காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகம் உள்ளிட்ட 66 மத்திய பல்கலைக்கழகங்களில் இந்த தோ்வு முறை அமல்படுத்தப்படவுள்ளது. நுழைவு தோ்வு கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.650, ஓபிசிக்கு ரூ.600, பட்டிலினத்தவா்கள் மற்றும் திருநங்கைகளுக்கு ரூ.550 வீதம் அறிவிக்கப்பட்டுள்ளது.