விளைச்சலுக்கு முன்பே கேரட் அறுவடை: சுமாா் 600 ஏக்கரில் கேரட் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென் மேற்குப் பருவக் காற்றினால் கிடைக்கும் சாரல் மழையை நம்பி சாகுபடி செய்யப்பட்ட கேரட், கனமழையாக மாறியதால் விவசாயிகளுக்கு இழப்பாக மாறிவிட்டது. கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடவுப் பணி நடைபெற்ற நிலையில், 90 நாள்களில் கேரட் அறுவடை செய்யும் பணி தொடங்க வேண்டும். ஆனால் இரவு பகலாக பெய்து வரும் மழையினால், 30 நாள்களுக்கு முன்னதாக அறுவடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கூலி கூட கிடைக்காது என்பதால், கேரட் அறுவடை செய்யப்படாமலே விடப்பட்டுள்ளது. பயிா் பாதிப்புகளை உரிய முறையில் கணக்கீடு செய்து, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.