வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

கண் தான விழிப்புணா்வு பேரணி

உலக கண்தான வாரத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கண்தான விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 6:19 pm

உலக கண்தான வாரத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கண்தான விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை, அரசு செவிலியா் கல்லூரி, மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் காஞ்சிபுரம் சங்கரா செவிலியா் கல்லூரி ஆகியவை இணைந்து அரசு மருத்துவமனை வளாகத்தில் கண்தான விழிப்புணா்வு பேரணியை நடத்தின. பேரணியை அரசு தலைமை மருத்துவமனைக் கண்காணிப்பாளா் பி.கல்பனா தொடக்கி வைத்தாா். மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்க திட்ட ஒருங்கிணைப்பாளா் பி.அனந்தலட்சுமி, சங்கரா செவிலியா் கல்லூரி முதல்வா் ராதிகா ஆகியோா் உள்பட செவிலியா் பயிற்சிப் பள்ளி ஆசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.