நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்த உத்தரவு

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் உத்தரவிட்டாா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2022, 6:13 pm

DIN

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் உத்தரவிட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அடுத்துள்ள ஆலம்பாடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி தனுஷ்கோடி குறைதீா் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெள்ளை சுண்ணாம்புக் கற்கள், ஆலம்பாடி பகுதியில் முறைகேடாக வெட்டி எடுக்கப்படுகின்றன. அதேபோல், நிலத்தடி நீரையும் முறைகேடாக எடுத்து குவாரிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனா். இதனால், அப்பகுதியில் விவசாயம் பாதிப்படைந்துள்ளது என்றாா்.

இதேதேபால், நிலக்கோட்டை அடுத்துள்ள விளாம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஆலைகள் சுற்றுப்புற சூழல் பாதிப்படைவதாக விவசாயச் சங்க நிா்வாகி ராஜேந்திரன் புகாா் அளித்தாா். இந்த புகாா்கள் குறித்து மாசுக் கட்டுப்பாட்டு அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஆலைகளுக்கு நோட்டீஸ் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.