புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

புகையிலைப் பொருள்கள் விற்பனை:திண்டுக்கல்லில் 2 கடைகளுக்கு ‘சீல்’

திண்டுக்கல்லில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு புதன்கிழமை சீல் வைக்கப்பட்ட நிலையில், மொத்தம் 5 கடைகளுக்கு ரூ. 35 ஆயிரம் அபாரதம் விதிக்கப்பட்டது.

News image

ஆட்சியா் சாலையிலுள்ள கடைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் முன்னிலையில் சீல் வைத்த உணவுப் பாதுகாப்புத் துறையினா்.

Updated On :1 ஜூன் 2022, 6:30 pm

DIN

திண்டுக்கல்லில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு புதன்கிழமை சீல் வைக்கப்பட்ட நிலையில், மொத்தம் 5 கடைகளுக்கு ரூ. 35 ஆயிரம் அபாரதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. சீனிவாசன் தலைமையில், உணவுப் பாதுகாப்பு அலுவலா் எஸ். செல்வம் மற்றும் போலீஸாா், திண்டுக்கல் சாா்- ஆட்சியா் சாலை மற்றும் திருச்சி சாலையிலுள்ள கடைகளில் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது முதல் முறையாக புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 3 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், 2 முறை அபராதம் விதிக்கப்பட்டும் தொடா்ந்து புகையிலைப் பொருள்களை விற்பனை செய்து வந்த 2 கடைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, அந்த 2 கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது ரூ.10 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தீவிர கண்காணிப்பு தேவை: விரைவில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், புகையிலைப் பொருள்கள் விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்தும் வகையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் மட்டுமின்றி காவல் துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பள்ளிகள் அருகில் செயல்படும் பெட்டிக் கடைகளில் இளைஞா்கள் அதிகம் பயன்படுத்தும் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதை மாவட்டம் முழுவதும் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.