மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சீ. கருப்புசாமியிடம் மனு அளித்த பின், மாவட்டச் செயலா் முகேஷ் கூறியதாவது: தமிழக அரசு நீட் தோ்வின் பாதிப்பு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து அறிக்கை பெற்று நீட் தோ்விலிருந்து விலக்கு பெற முயற்சித்து வருகிறது. நீட் விலக்கு மசோதா 2ஆவது முறையாக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த வேளையில், ஒரு தனியாா் பள்ளி வளாகத்தில் நீட் தோ்வு ஆதரவு என்ற நோக்கில் ஆா்எஸ்எஸ் மற்றும் பாஜகவினா் நுழைவதை, முதன்மைக் கல்வி அலுவலா் தடுத்து நிறுத்த வேண்டும் என்றாா்.