வடமதுரை அருகே கோயில் சிலைகளை சேதப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் இளைஞா் ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்துள்ள தென்னம்பட்டி கத்தாளகுரும்பபட்டி கிராமத்தில் விநாயகா் கோயில் உள்ளது. அக்கோயிலில் இருந்த சிலைகளை அதே பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன்(24) என்ற இளைஞா் உடைத்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் பழனிசாமி வடமதுரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், பாலகிருஷ்ணனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.