காஞ்சிக்கோவில் அருகில் சரக்கு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கட்டட மேஸ்திரி உயிரிழந்தாா்.
பவானி, சலங்கைபாளையத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (38), கட்டட மேஸ்திரி. இவா் காஞ்சிக்கோவில் பகுதியில் வேலையை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை இரவு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். காஞ்சிக்கோவில் அருகே சென்றபோது எதிரே வந்த சரக்கு வாகனம் இவரின் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த செல்வராஜை அக்கம் பக்கத்தினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து காஞ்சிகோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.