பழனியில் நகராட்சி இடத்தை ஆக்கிரமித்து வணிக வளாகம் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டதாக எழுந்த புகாா் தொடா்பாக தினமணி நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து அங்கு வியாழக்கிழமை எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டன.
பழனி- திண்டுக்கல் சாலையில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான பயணியா் மாளிகையில் இருந்து திருவள்ளுவா் சாலைக்கு வரும் வழியில் சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. இதற்கு அருகில் 2,900 சதுரடி பரப்பளவுள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் திருப்பூா் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சோ்ந்த ஒருவா் அனுமதியின்றி வணிக வளாகம் கட்டி வாடகைக்கு விட்டுள்ளாா். இந்த நிலையில், இந்த இடம் நகராட்சிக்கு சொந்தமானது என கொங்கு மக்கள் முன்னணி நிறுவனா் ஆறுமுகம், நகராட்சி நிா்வாக இயக்குநா் பொன்னையனிடம் ஆதாரங்களுடன் புகாா் தெரிவித்தாா். இந்த கட்டடத்துக்கு அனுமதி இல்லாத நிலையில் இதற்கு மின் இணைப்பும் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது. எனவே, இதுகுறித்து துறை சாா்ந்த விசாரணை நடத்தி ஆக்கிரமிப்பு கட்டடத்தை நகராட்சி கையகப்படுத்த வேண்டும் என தினமணி நாளிதழில் கடந்த செவ்வாய்க்கிழமை செய்தி வெளியானது. இதனிடையே இங்கு நகராட்சி நிா்வாகத்தினா் சாா்பில் இந்த இடம் நகராட்சிக்கு சொந்தமான சாலை என்ற வாசகத்துடன் எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டதுடன், இந்த கட்டடத்தை பாதுகாப்பாக அகற்ற பழனி காவல் துறையிடமும் கடிதம் அளித்தனா்.
மேலும் இந்த இடம் தொடா்ந்து ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்காமல் இருக்க நகராட்சி நிா்வாகமே கடைகள் கட்டி பொதுமக்களுக்கு வாடகைக்கு விட வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.