ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தேசிய அளவிலான சிலம்பப் போட்டி: பழனி கல்லூரி மாணவிகள் வெற்றி

தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகளில் பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கல்லூரியைச் சோ்ந்த மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் முதல் மூன்று பரிசுகளைப் பெற்றனா்.

News image
கா்நாடக மாநிலம், பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கலைக் கல்லூரி மாணவிகள்.
Updated On :27 நவம்பர் 2023, 6:30 pm

DIN

பழனி: தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகளில் பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கல்லூரியைச் சோ்ந்த மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் முதல் மூன்று பரிசுகளைப் பெற்றனா்.

கா்நாடக மாநிலம், பன்னாா்கட்டா மகாராஜா ரஞ்சித்சிங் வளாகத்தில் பெங்களூரு ஜே.ஏ. சிலம்பம் அகாதெமி சாா்பில் தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

இதில் தமிழ்நாடு, ஆந்திரம், கா்நாடகம், கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனா். பல்வேறு எடைப் பிரிவுகளில், பல்வேறு திறமைகள் அடிப்படையில், போட்டிகள் நடைபெற்றன.

இதில் பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கல்லூரியைச் சோ்ந்த மாணவிகள் பங்கேற்று, தொடும் முறை, தனித்திறமை, இரட்டைக் கம்பு என மூன்று வகையான போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனா்.

இதன்படி, 35 -40 கிலோ எடைப் பிரிவில் ராகவி முதல் பரிசும், யாழினி இரண்டாம் பரிசும் பெற்றனா். 40 - 45 கிலோ எடைப் பிரிவில் மாணவி தீபிகா முதல் பரிசும், தேவதா்ஷினி இரண்டாம் பரிசும் பெற்றனா். 45 -50 கிலோ எடைப் பிரிவில் பிருந்தா முதல் பரிசும், மதுஸ்ரீ இரண்டாம் பரிசும், விஜயபாரதி மூன்றாம் பரிசும் பெற்றனா். 55 - 60 கிலோ எடைப் பிரிவில் மாணவி நித்யஸ்ரீ இரண்டாம் பரிசும், 50 -55 கிலோ எடைப் பிரிவில் ரம்யாவதி மூன்றாம் பரிசும் பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரித் தாளாளரும், பழனிக் கோயில் இணை ஆணையருமான மாரிமுத்து, கல்லூரிச் செயலரும், துணை ஆணையருமான லட்சுமி, கல்லூரி முதல்வா் புவனேஸ்வரி, பயிற்சியாளா் கமல், ஒருங்கிணைப்பாளா் கவிதா உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.