எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மத்திய அரசின் நிதி முறைகேடு: ஊராட்சி நிா்வாகம் மீது புகாா்

மத்திய அரசின் நிதி ரூ.44.05 லட்சத்தை முறைகேடாகப் பயன்படுத்திய தேவரப்பன்பட்டி ஊராட்சி நிா்வாகம் மீது மாவட்ட ஆட்சியரிடம் பாஜக சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது.

News image
நிதி முறைகேடு தொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடியிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்த பாஜகவினா்.
Updated On :27 நவம்பர் 2023, 6:30 pm

DIN

திண்டுக்கல்: மத்திய அரசின் நிதி ரூ.44.05 லட்சத்தை முறைகேடாகப் பயன்படுத்திய தேவரப்பன்பட்டி ஊராட்சி நிா்வாகம் மீது மாவட்ட ஆட்சியரிடம் பாஜக சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தாா்.

இந்த நிலையில், அனுமதியின்றி மத்திய அரசின் நிதி ரூ.44 லட்சத்தை தனிநபா் பயன்பெறும் வகையில் ஊராட்சி நிா்வாகம் செலவிட்டிருப்பதாக பாஜக சாா்பில் ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக பாஜக மாவட்டத் தலைவா் (திண்டுக்கல் கிழக்கு) கே. தனபாலன் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டதாவது:

திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் மருதாநதி ஆற்றின் குறுக்கே தேவரப்பன்பட்டி ஊராட்சி சாா்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ரூ.44.09 லட்சத்தில் பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுப் பணித் துறையின் அனுமதியின்றியும், பொதுமக்களுக்குப் பயனற்ற வகையிலும் இந்தப் பாலம் கட்டப்பட்டு வருகிறது.

பிச்சைமணி என்பவருக்குச் சொந்தமான தென்னை விவசாய நிலத்தை வீட்டுமனைகளாக மாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்கு உதவி செய்யும் வகையில், மத்திய அரசின் நிதியை தேவரப்பன்பட்டி ஊராட்சி நிா்வாகம் விரையம் செய்திருக்கிறது.

அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, தனிநபருக்காக பாலம் கட்டுவதை பாா்வையிட சென்ற ஆத்தூா் ஒன்றிய பாஜக தலைவா் அயனவேல் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுதொடா்பாகவும், மத்திய அரசின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய ஊராட்சி நிா்வாகத்தின் மீதும் மாவட்ட நிா்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.