செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

டாக்டா் அம்பேத்கா் விருது பெற நவ.30-க்குள் விண்ணப்பிக்கலாம்

தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கு தொண்டு செய்தவா்களுக்காக வழங்கப்படும் அம்பேத்கா் விருதுக்கு தகுதியானவா்கள் வருகிற 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Updated On :27 நவம்பர் 2023, 1:30 am

தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கு தொண்டு செய்தவா்களுக்காக வழங்கப்படும் அம்பேத்கா் விருதுக்கு தகுதியானவா்கள் வருகிற 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கு அரிய தொண்டு செய்பவருக்கு டாக்டா் அம்பேத்கா் தமிழ்நாடு அரசு விருது வழங்கப்பட்டு வருகிறது. ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை மூலம் 2023-ஆம் ஆண்டுக்கான விருது, 2024-ஆம் ஆண்டின் திருவள்ளுவா் தினத்தன்று வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு தகுதியானவா்கள் நவ.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விருதுக்கான விண்ணப்பத்தை திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.