பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஷ் ஃபீல்டிங்கில் தனது அபாரமான கேட்ச்சினால் ஆட்டத்தில் மாற்றம் கண்டது என்றும் அந்தக் கேட்சிற்காக தன்னைத் தானே பாராட்டிக் கொள்வதாகவும் பேசியிருப்பது சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது.
நேற்றிரவு வான்கடேவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 195/6 ரன்கள் எடுக்க, பஞ்சாப் அணி 16.3 ஓவர்களில் 198/3 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் 17.3ஆவது பந்தில் மார்கோ யான்சென் வீசிய பந்தை ஹார்திக் பாண்டியா அடிக்க, எல்லைக் கோட்டில் நின்றிருந்த ஸ்ரேயாஷ் லாவகமாக தாவிப் பிடித்து, எல்லைக் கோட்டை தாண்டும்போது அருகில் நின்றிருந்த சேவியர் பிராட்லெட்டிடம் வீசுவார். அவரும் அதனைத் தவறவிடாமல் பிடித்துவிடுவார்.
எல்லைக்கோட்டுக்கு அருகில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் ஓய்வறையில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் வாயடைத்துப் பார்ப்பார்கள். இந்தக் கேட்ச் இந்த சீசனில் சிறந்தது எனப் பலரும் கூறிவருகிறார்கள்.
இது குறித்து ஸ்ரேயாஷ், “எனது கேட்ச்தான் மும்பையை அதிக ரன்கள் கொடுக்கவிடாமல் தடுத்தது (சிரிக்கிறார்). இல்லை, எங்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள்” என்றார்.
பஞ்சாப் கிங்ஸ் அணி வெளியிட்ட மற்றுமொரு விடியோவில் ஸ்ரேயாஸ், “எனது கேட்ச் மிகவும் பிரமிக்கத்தக்கது. யாருமே எனக்கு பாராட்டு தெரிவிக்காவிட்டாலும் நானே எனது தோளைத் தட்டிக்கொள்வேன்” என்றார். இவரது ஃபீடிங்கும் தன்னம்பிக்கையும் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
Summary
A Stunning Catch in ipl 2026 against Mumbai Indians ! Shreyas Applauds Himself!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு; கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா!

முதலிடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்..! 3ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்ட ஆர்சிபி!

இந்திய டி20 அணிக்கு புதிய கேப்டனாகும் ஸ்ரேயாஷ் ஐயர்?

மக்களின் கேப்டன் ஸ்ரேயாஷ்..! இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைக்குமா?
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



