நிலக்கோட்டை: செம்பட்டியை அடுத்த, வீரக்கல் அரசு மதுக் கடையில் ஊழியரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய 4 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அடுத்த, வீரக்கல் அருகே குடியிருப்புப் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கூடத்தில், வீரக்கல் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் (37) வேலகவுண்டன்பட்டியைச் சோ்ந்த, பழனியப்பன் (42) ஆகியோா் வேலை செய்தனா்.
இந்த நிலையில் கூத்தம்பட்டி பகுதியைச் சோ்ந்த 2 போ், வெளியூரை சோ்ந்த 2 போ் என, 2 போ் அங்கு மது அருந்த வந்தனா். அவா்கள் அருந்திவிட்டு செல்லும்போது, செல்வராஜ் அவா்களிடம் சாப்பிட்ட உணவு பொருளுக்கு பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த 4 பேரும் செல்வரஜை கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடினா்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து, செம்பட்டி போலீஸாா் தப்பி ஓடிய 4 போ் மீது வழக்குப் பதிவு செய்து அவா்களைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்ற அதிமுகவினா் 3 போ் மீது வழக்கு!

நீதிமன்ற ஊழியரைத் தாக்கியதாக தம்பதி மீது வழக்கு

டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற 3 போ் தப்பியோட்டம்

நகைக் கடை ஊழியரைத் தாக்கி ரூ.41 லட்சம் பறித்த வழக்கு: 3 போ் கைது
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

