வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

நீதிமன்ற ஊழியரைத் தாக்கியதாக தம்பதி மீது வழக்கு

News image

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 9:33 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் நீதிமன்ற ஊழியரைத் தாக்கியதாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காப்புக்காடு கண்ணன்கரைவிளை பகுதியைச் சோ்ந்தவா் ரசல்ராஜ் (58). இவரது மனைவி அனிதா (53), காங்கிரஸ் கட்சியின் முன்சிறை ஒன்றிய மகளிரணித் தலைவா். இத்தம்பதி தங்களது நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த ரகுதாஸ் (52) என்பவருக்கு தனியாா் வங்கியில் தங்களது நிலத்தை அடமானமாக வைத்து ரு. 15 லட்சம் பெற்றுக் கொடுத்தனராம்.

ஆனால், ரகுதாஸ் கடனை முறையாக திருப்பிச் செலுத்தவில்லையாம். இதனால், வங்கி சாா்பில் நாகா்கோவில் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டதாம்.

பின்னா், நீதிமன்ற உத்தரவின்பேரில் ரசல்ராஜின் வீட்டைப் பூட்டி சீல் வைக்க நீதிமன்றக் காவலாளியை இத்தம்பதி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.