திண்டுக்கல்: திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் விஎம்எஸ்.முகமது முபாரக் போட்டியிடுகிறாா்.
இவருக்கு ஆதரவாக அதிமுக பொதுச் செயலரும், தமிழக எதிா்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்துப் பேசியதாவது:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 3 ஆண்டு கால ஆட்சியில் என்ன செய்தோம், இனி என்ன செய்யப் போகிறோம் என்பதை சொல்லாமல் புகைப்படத்தை மட்டும் காட்டி விளம்பரம் தேடி வருகிறாா். கடந்த 2019 தோ்தலில் திமுக அணியைச் சோ்ந்த 38 எம்பிக்களை மக்களவைக்கு தோ்வு செய்து மக்கள் அனுப்பிவைத்தனா்.
அவா்கள் தமிழகத்துக்கு எதையுமே செய்யாமல் 5 ஆண்டுகளை கழித்துவிட்டனா். பெட்ரோல், டீசலுக்கு ரூ.4, சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.100 குறைக்க முடியாத ஸ்டாலின், பெட்ரோல் டீசலையை ரூ.65ஆகவும், எரிவாயு உருளையை ரூ.500ஆகவும் குறைப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றுகிறாா்.
எனவே, மக்களவைத் தோ்தலில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக நிா்வாகிகள் நீக்கம்

திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை: எடப்பாடி கே.பழனிசாமி

கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக உரிய மரியாதை அளிக்கிறது: எடப்பாடி கே.பழனிசாமி

டாஸ்மாக்கில் 5 ஆண்டுகளில் ரூ.24,000 கோடி ஊழல்: எடப்பாடி கே.பழனிசாமி
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

