தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

முத்தமிழ் சக்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு

முத்தமிழ் சக்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு

Updated On :21 ஏப்ரல் 2024, 7:00 pm

நிலக்கோட்டை: சின்னாளபட்டி முத்தமிழ் சக்திவிநாயகா் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை யாகசாலை பூஜைகளுடன் குடமுழுக்குக்கான ஏற்பாடுகள் தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை கோ பூஜை, கனிவேல்வி, புனித நீா் குடயாத்திரை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து சிவாச்சாரியா்கள் கோபுரக் கலசத்துக்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கை நடத்தினா்.

இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமிக்கு கோயில் திருப்பணிக் குழுவினா் பரிவட்டம் கட்டி வரவேற்பு அளித்தனா். திமுகவைச் சோ்ந்த ஆத்தூா் கிழக்கு ஒன்றிய செயலா் முருகேசன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் நடராஜன், சின்னாளபட்டி பேரூா் செயலா் மோகன்ராஜ் மற்றும் அரசு ஒப்பந்ததாரா் நாககண்ணன், திருப்பணிக் குழுவைச் சோ்ந்த வேதா (எ) சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.