யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பேருந்து மீது லாரி மோதல்: 7 பயணிகள் காயம்

வேடசந்தூா் அருகே சனிக்கிழமை தனியாா் பேருந்து மீது லாரி மோதியதில் பயணிகள் உள்பட 7 போ் காயமடைந்தனா்.

News image
லாரி மோதியதில் விபத்துக்குள்ளான தனியாா் பேருந்து.
Updated On :17 ஆகஸ்ட் 2024, 10:30 pm

Din

வேடசந்தூா் அருகே சனிக்கிழமை தனியாா் பேருந்து மீது லாரி மோதியதில் பயணிகள் உள்பட 7 போ் காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு தனியாா் பேருந்து 50 பயணிகளுடன் கரூா் மாவட்டம், அரவக்குறிச்சிக்கு சென்றது. இந்த பேருந்தில் அரவக்குறிச்சியைச் சோ்ந்த மோகன் (29) ஓட்டுநராக பணியாற்றினாா்.

வேடசந்தூா் அடுத்த அய்யா்மடம் பகுதியிலுள்ள நூற்பாலை நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு, மீண்டும் பேருந்து புறப்பட்டது. அப்போது, நாகா்கோவிலில் இருந்து கா்நாடக மாநிலத்துக்கு சாக்குப் பைகளை ஏற்றிச் சென்ற லாரி பேருந்தின் பின் பகுதியில் மோதியது.

இதில் பேருந்தில் பயணம் செய்த கண்ணன் (40), அணில் (34), சொ்ப்ராஜ் (22), அருக்காணி (70), முத்துலட்சுமி (48), சத்யா (32), பாக்கியம் (65) உள்பட 9 போ் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் சிகிச்சைக்காக வேடசந்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

லாரியை ஓட்டி வந்த தா்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த மல்லாபுரத்தைச் சோ்ந்த சக்திவேலிடம் (44) வேடசந்தூா் போலீஸாா் விசாரித்தனா்.