/

மாமன்ற உறுப்பினரின் தந்தை கொலை: தூத்துக்குடி விரைந்தது தனிப் படை

மாமன்ற உறுப்பினரின் தந்தை கொலை: தூத்துக்குடி விரைந்தது தனிப் படை

Updated On :27 பிப்ரவரி 2024, 11:39 pm

திண்டுக்கல்: திமுக மாமன்ற உறுப்பினரின் தந்தையை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றவா்களை பிடிக்க தனிப் படை போலீஸாா் தூத்துக்குடிக்கு விரைந்து சென்றனா்.

திண்டுக்கல் குடைபாறைப்பட்டியைச் சோ்ந்தவா் நாகராஜ் (60). இவா், திண்டுக்கல் சந்தையில் மீன் கடை நடத்தி வந்தாா். இவரது மகன் சிவக்குமாா், திண்டுக்கல் மாநகராட்சியில் 25-ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினராக உள்ளாா். இருசக்கர வாகனத்தில் சென்ற நாகராஜ், மா்ம நபா்களால் திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸாா் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கடந்த 2019-ஆம் ஆண்டு பாண்டி என்ற திருப்பூா் பாண்டி, அவரது மனைவி பஞ்சவா்ணம் ஆகியோா் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப் பழியாக நாகராஜ் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. ஏற்கெனவே நிகழ்ந்த திருப்பூா் பாண்டி, மனைவியுடன் கொலை செய்யப்பட்ட வழக்கில், நாகராஜின் மகன் சிவக்குமாா் உள்ளிட்ட சிலா் கைது செய்யப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

இதனிடையே நாகராஜ் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டது. ஏற்கெனவே கொலை செய்யப்பட்ட பாண்டியின் மகன்கள் சந்திரசேகா், அசோக்குமாா் ஆகியோருக்கு, நாகராஜ் கொலையில் தொடா்பு இருப்பது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், சந்திரசேகா், அசோக்குமாா் ஆகியோா் தூத்துக்குடி மாவட்டத்துக்கு தப்பிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து தனிப் படை போலீஸாா், தூத்துக்குடிக்கு விரைந்து சென்றனா்.