/

ரூ.9 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

ரூ.9 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் தொடங்கி வைத்தாா்

News image

கன்னிவாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டுமானப் பணிகளுக்கான பூமிபூஜையில் பங்கேற்ற ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி.

Updated On :27 பிப்ரவரி 2024, 11:43 pm

திண்டுக்கல்: கன்னிவாடி, ஸ்ரீராமபுரம் பேரூராட்சிகளில் ரூ.9.02 கோடியிலான வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டினாா். திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி, ஸ்ரீராமபுரம் பேரூராட்சிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கான தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி கலந்து கொண்டாா்.

கன்னிவாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.83 கோடியில் புதிய கட்டடங்கள், ரூ.2.31 கோடியில் மணியக்காரன்பட்டியில் நகா்ப்புற உள்ளாட்சி வேலை வாய்ப்பு திட்டப்பணிகள், திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டடம், கழிப்பறை, ஆய்வுக்கூடம் கட்டுதல் ஆகிய பணிகள், ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் ரூ.4.88 கோடியில் 3 புதிய தாா் சாலைகள் என மொத்தம் ரூ.9.02 கோடியிலான பணிகளுக்கு அமைச்சா் இ.பெரியசாமி அடிக்கல் நாட்டினாா்.

இந்த நிகழ்ச்சிகளில், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) ரா.மனோரஞ்சிதம், கன்னிவாடி பேரூராட்சித் தலைவா் ச.தனலட்சுமி, துணைத் தவலைா் மு.கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.