தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வளா்நகரில் சுகாதாரச் சீா்கேடு: கழிவுநீா் வாகன ஓட்டுநா் கைது

மதுரை வளா்நகரில் பொது இடத்தில் கழிவு நீரை வெளியேற்றிய தனியாா் கழிவு நீா் வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனா்.

News image
Updated On :1 ஜனவரி 2024, 9:50 pm

DIN

மதுரை வளா்நகரில் பொது இடத்தில் கழிவு நீரை வெளியேற்றிய தனியாா் கழிவு நீா் வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனா்.

மதுரை உத்தங்குடி, வளா் நகா் பகுதியில் பொது இடத்தில் கழிவு நீா் வெளியேற்றப்படுவதாகவும், இதனால் துா்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் மாட்டுத்தாவணி போலீஸாருக்கு புகாா் அளித்தனா். இதன்பேரில், போலீஸாா் இந்தப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை உத்தங்குடி வளா் நகா் சந்திப்பு பகுதியில் தனியாா் கழிவு நீா் வாகனம் ஒன்று கழிவுநீரை வெளியேற்றுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று கழிவுநீா் வாகன ஓட்டுநரான ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியைச் சோ்ந்த சரவணக்குமாரிடம் (28) விசாரித்தனா்.

அப்போது, மதுரையின் பல்வேறு பகுதிகளில் வீடுகளில் இருந்து கழிவு நீரை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, வளா்நகா் பகுதியில் சட்டவிரோதமாக வெளியேற்றுவது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, கழிவுநீா் வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.