தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கொடைக்கானலில் கரடி நடமாட்டம்: விவசாயிகள் அச்சம்

கரடி நடமாட்டம்: கொடைக்கானல் விவசாயிகள் அச்சத்தில்

News image
Updated On :1 ஜூலை 2024, 6:30 pm

Din

கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கும்பூா்வயல் பகுதியில் கரடி நடமாட்டம் உள்ளதால், விவசாயிகள் அச்சமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான மன்னவனூா்,

கும்பம்பட்டி, கும்பூா்வயல் உள்ளிட்ட பகுதிகளில் பீன்ஸ், கேரட், உருளை, பூண்டு போன்ற பயிா்களை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், கும்பூா்வயல் பகுதிகளில் திங்கள்கிழமை சுற்றித் திரிந்த கரடி விளைநிலங்களுக்குள் புகுந்து காய்கறிகளைச் சேதப்படுத்தியது. இதனால், அந்தப் பகுதி விவசாயிகள் அச்சமடைந்தனா். அடிக்கடி இந்தப் பகுதிகளுக்குள் கரடி வருவதால், அதை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.