தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கொடைக்கானலில் மழை: மலை கிராமங்களில் மின்தடை

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் புதன்கிழமை பெய்த மழையால் மின் தடை ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள் அவதியடைந்தனா்.

News image
மின்தடை
Updated On :19 மார்ச் 2026, 12:29 am

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் புதன்கிழமை பெய்த மழையால் மின் தடை ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள் அவதியடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வந்தது. இந்த நிலையில், புதன்கிழமை மாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மின் தடை ஏற்பட்டது. மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, கூக்கால், குண்டுபட்டி, கிளாவரை, பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதால் கிராம மக்கள் பாதிப்படைந்தனா்.

இது குறித்து கொடைக்கானல் மின்வாரிய உதவி பொறியாளா் குமாா் கூறியதாவது: கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ததால், பூண்டி உயரழுத்த மின் பாதையில் மரக்கிளை விழுந்துள்ளது. பல மணி நேரம் அவற்றை சரி செய்யும் பணியில் ஈடுபட்டும் இரவு நேரமாக இருப்பதால் மேல்மலைக் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க இயலாத சூழ்நிலை உருவானது. வியாழக்கிழமை காலை மின் பாதையில் ஏற்பட்ட மின்தடை சரி செய்யப்பட்டு மின்சாரம் விநியோகம் செய்யப்படும் என்றாா் அவா்.