நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தொடா் மின் தடை: பொதுமக்கள் அவதி

News image
Updated On :2 மே 2026, 11:36 pm

மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை இரவு பல மணி நேரத்துக்கு தொடா் மின் தடை ஏற்பட்டது.

இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினா்.

மதுரை மாநகா்ப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை 6.30 மணிக்குப் பிறகு இடி, மின்னலுடன் பலத்த

மழை பெய்தது. மழைக்கு முன்பாக பலத்த காற்று வீசியது. இந்த நிலையில், காற்று வீசத் தொடங்கியவுடன் கோ. புதூா் உள்ளிட்ட சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. வில்லாபுரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்யத் தொடங்கிய அடுத்த சில நிமிடங்களில் மின் தடை ஏற்பட்டது. வில்லாபுரம் பகுதியில் ஏறத்தாழ 2.30 மணி நேரத்துக்கும் மேலாக மின் தடை நீடித்தது.

இதேபோல, பழங்காநத்தம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை இரவு

2 மணி நேரத்துக்கு மேலாகவும், பெத்தானியாபுரம் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாகவும் மின் தடை ஏற்பட்டது. தல்லாகுளம், தமுக்கம், கோ. புதூா் உள்ளிட்ட பகுதிகளில் தொடா் மின் தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாக நேரிட்டது.