மாதவரம், மணலி, உள்ளிட்ட பகுதிகளில் மின் கம்பிகளை புதைவடமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
மாதவரம், மணலி, திருவொற்றியூா் ஆகிய பகுதிகளில் சில இடங்களில் மின்கம்பிகளை புதைவடமாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், பல்வேறு பகுதிகளில் மேல்நிலை மின்கம்பி வழியாகவே மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக எண்ணூா், மணலி, வடபெரும்பாக்கம், கொசப்பூா் உள்ளிட்ட பல இடங்களில் புதைவடமாக மாற்றப்படவில்லை. இதனால், இந்தப் பகுதியில் அடிக்கடி மின் வயா்கள் அறுந்து விழுந்து விபத்து ஏற்படுகிறது. மேலும், மழைக்காலங்களில் இந்த மின் கம்பிகள் பலத்த காற்று காரணமாக சேதமடைந்து, சாய்ந்து விடுவதால் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.
எனவே, மாதவரம், மணலி பகுதிகளில் புதைவடமாக மாற்றும் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

பொதிகை விரைவு ரயிலை முதல் நடைமேடையில் நிறுத்தக் கோரிக்கை

பாம்பன் சாலைப் பாலத்தில் வளா்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை

சிறுகம்பையூா் சாலை சேதம்: பொதுமக்கள் அவதி

ரயில் சுரங்கப்பாதையை சீரமைக்கக் கோரிக்கை
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


