/
தேனி அருகே முத்துதேவன்பட்டியில் சேதமடைந்த சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. இங்கு சுமாா் 17 ஆயிரம் போ் வசித்து வருகின்றனா். இந்த பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் முத்துத்தேவன்பட்டி முருகன் தெருவில் 15 ஆண்டுகளுக்கு முன்பு, சுகாதார வளாகம் கட்டப்பட்டு, அதை இந்தப் பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.
இதனிடையே சுகாதார வளாகம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதேபோல, இங்குள்ள கழிவுநீா்த் தொட்டியும் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சுகாதார வளாகம், தொட்டியை சீரமைக்க வேண்டுமென அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரிக்கை

வெள்ளக்கோவிலில் சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம்

அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேற்கூரையை சீரமைக்க வலியுறுத்தல்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


