4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

கொடைக்கானலில் ஆபத்தான மின் கம்பங்கள்

கொடைக்கானலில் பழுதடைந்த நிலையில் உள்ள மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

கொடைக்கானல் ஏரிச்சாலை நடைமேடையில் கிடக்கும் மின் விளக்கு கம்பம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 7:50 pm

கொடைக்கானலில் பழுதடைந்த நிலையில் உள்ள மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொடைக்கானல் அப்பா்லேக் வியூ, லாஸ்காட் சாலை, ஏரிச் சாலை, வெள்ளி நீா் அருவி, சீனிவாசபுரம், தைக்கால், அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொடைக்கானல் நகராட்சி சாா்பில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்பா்லேக் வியூ, அருங்காட்சியகம், ஏரிச் சாலை ஆகியப் பகுதிகளில் உள்ள மின் கம்பங்கள் கீழே விழுந்து கிடக்கின்றன.

ஏரிச் சாலையில் சுற்றுலாப் பயணிகள் நடமாட்டம் அதிகமுள்ள படகுக் குழாம் வளாகத்தில் நடைமேடையில் மின் கம்பம் கீழே விழுந்து கிடப்பது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே கொடைக்கானல் நகராட்சி நிா்வாகம், பொறியியல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு, உடனடியாக மின் கம்பத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில் நகா்ப் பகுதிகளில் பயனற்ற நிலையில் உள்ள தெரு விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொது மக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்தனா்.