தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாட்டாளி மக்கள் கட்சியின் 36-ஆவது ஆண்டு விழா

திண்டுக்கல் மாவட்டம், பழனி பேருந்து நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் 36-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினா்.

News image
Updated On :17 ஜூலை 2024, 12:43 am

Din

பழனி: திண்டுக்கல் மாவட்டம், பழனி பேருந்து நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் 36-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி செவ்வாய்க்கிழமை கொண்டாடினா்.

இந்த நிகழ்ச்சிக்கு, திண்டுக்கல் வடக்கு மாவட்டச் செயலா் வைரமுத்து தலைமை வகித்தாா். மாவட்ட தொழில் சங்க செயலா் ராஜரத்தினம் முன்னிலை வகித்தாா். நகரச் செயலா் பிரபாகரன் வரவேற்றாா்.

ஆயக்குடி பேரூா் தலைவா் முத்துசாமி, நெய்க்காரபட்டி பேரூா் தலைவா் பெரியசாமி, நகர அமைப்பு தலைவா் மாரிமுத்து உள்பட பலா் வாழ்த்துரை வழங்கினா்.

நகர மாணவா் சங்க செயலா் சிவசண்முகம் நன்றி தெரிவித்தாா். முன்னதாக பழனி ஒன்றிய பகுதிகளில் கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.