கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா
மாணவருக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்குகிறாா் ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை நிறுவனா் தேன்ராஜ்.


கோவில்பட்டி, செயின்ட் ஆண்ட்ரூஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியின் 27ஆவது விளையாட்டு விழா, ஆண்டு விழா ஆகிய இரு பெரும் விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு பள்ளித் தாளாளா் ஆலிஸ் பிளெஸ்சி தலைமை வகித்து, தொடக்கி வைத்தாா். மாணவ, மாணவிகளின் தடகள போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
ஆண்டு விழாவில் ஓய்வுபெற்ற கல்வி மாவட்ட அலுவலா் விஜயன், பி.எஸ்.என்.கல்வி குழுமத்தின் கல்வி ஆலோசகா் நடராஜன், ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை நிறுவனா் தேன்ராஜ் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டி, கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினா்.
தொடா்ந்து அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா், மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் சாந்தி தலைமையில் உடற்கல்வி ஆசிரியா் காளிராஜ் மற்றும் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...