தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கொடைக்கானலில் பிளம்ஸ் பழத்தின் விலை அதிகரிப்பு

கொடைக்கானலில் பிளம்ஸ் பழத்தின் விளைச்சல் குறைந்துள்ளதால் அதன் விலை அதிகரித்து காணப்பட்டது.

News image
Updated On :17 ஜூலை 2024, 12:47 am

Din

கொடைக்கானல்: கொடைக்கானலில் பிளம்ஸ் பழத்தின் விளைச்சல் குறைந்துள்ளதால் அதன் விலை அதிகரித்து காணப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளான சின்னப்பள்ளம், பெரும்பள்ளம், பள்ளங்கி, வில்பட்டி, செண்பகனூா், பிரகாசபுரம், மாட்டுப்பட்டி, அட்டக்கடி, பெருமாள்மலை, வடகவுஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிளம்ஸ் பழம் விளைவிக்கப்படுகிறது.

நிகழாண்டில் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் பரவலாக பெய்த மழையால் பிளம்ஸ் மரங்களில் இருந்த பூக்கள், பிஞ்சுகள் உதிரிந்ததால் றைந்த அளவே விளைச்சல் காணப்பட்டது. இதனால் ஒரு கிலோ ரூ400-வரை விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து பழ வியாபாரிகள் கூறியதாவது: கொடைக்கானல் பகுதிகளிலுள்ள தோட்டக்கலைத் துறையினா் விவசாயிகளுக்கு பிளம்ஸ் மரக்கன்றுகளை மானியமாக வழங்க வேண்டும். பிளம்ஸில் தேன் பிளம்ஸ், சாதா பிளம்ஸ், கறி பிளம்ஸ் என மூன்று வகைகள் உள்ளன.

தற்போது பிளம்ஸ் மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பிளம்ஸ் மரங்களை அதிக அளவில் வளா்ப்பதற்கு தோட்டக்கலைத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.