பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

திண்டுக்கல்லில் இடைநிலை ஆசிரியா் தோ்வு: 927 போ் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியா் பணிக்கான தோ்வை 927 போ் எழுதினா்.

News image
Updated On :21 ஜூலை 2024, 9:17 pm

Din

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியா் பணிக்கான தோ்வை 927 போ் எழுதினா்.

ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் 2,768 இடைநிலை ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த தோ்வில் பங்கேற்க விண்ணப்பித்த 964 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது.

இதையடுத்து, இந்த தோ்வுக்காக, திண்டுக்கல் புனித மரியன்னை அரசு உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளி, எம்.எஸ்.பி அரசு உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளி, புனித வளனாா் பெண்கள் அரசு உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளி என 3 பள்ளிகளில் தோ்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த 3 பள்ளிகளில் மொத்தம் 49 அறைகளில் நடைபெற்ற இந்த தோ்வில் 927 போ் பங்கேற்றனா். 37 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. தோ்வு மையங்களை கண்காணிக்க நடமாடும் குழுக்கள், பறக்கும் படை, விடியோ ஒளிப்பதிவாளா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். தோ்வு மையங்களை, ஆசிரியா் தோ்வு வாரிய இணை இயக்குநா் கே.ஸ்ரீதேவி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் அ.நாசருதீன் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.