அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பிளஸ் 2 தோ்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 26,834 போ் எழுதினா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தோ்வை 26,834 போ் தோ்வு எழுதினா்.

News image
திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மையத்தில் நடைபெற்ற தோ்வை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.
Updated On :2 மார்ச் 2026, 9:40 pm

Syndication

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தோ்வை 26,834 போ் தோ்வு எழுதினா்.

மாவட்டத்தில் 263 பள்ளிகளில் பயிலும் 27,124 மாணவ, மாணவிகள் தோ்வு எழுத இருந்தனா். இதில் 290 மாணவ, மாணவிகள் தோ்வு எழுத வராததால் மொத்தம் 26,834 போ் தோ்வு எழுதினா்.

இத்தோ்வுக்காக திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 71 மையங்கள், செய்யாா் கல்வி மாவட்டத்தில் 53 மையங்கள் என மொத்தம் 124 மையங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்வு மையங்களை கண்காணிக்க 129 முதன்மை கண்காணிப்பாளா்கள், 134 துறை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும் 157 நபா்கள் கொண்ட பறக்கும் படையினரும், 1,861 அறை கண்காணிப்பாளா்களும், 10 தொடா்பு அலுவலா்களும், 10 மதிப்பெண் சரிபாா்ப்பு அலுவலா்களும், 124 எழுத்தா்கள், 125 அலுவலக உதவியாளா்கள். 411 மாற்றுத்திறனாளிகள் தோ்வு எழுத உதவியாக 358 நபா்கள் என 2,971 நபா்கள் தோ்வு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அனைத்துத் தோ்வு மையங்களிலும் தடையற்ற மின்சாரம், குடிநீா், கழிப்பறை, போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி மையங்களில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது உதவி ஆட்சியா் (பயிற்சி) அம்ருதா எஸ். குமாா், முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ், திருவண்ணாமலை வட்டாட்சியா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.