அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பிளஸ் 2 தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 86 மையங்களில் 18,579 போ் எழுதினா்

நாமக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வு மொழித் தோ்வை 18,579 போ் எழுதினா்.

News image
நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் சொல்வதை கேட்டு எழுதுவதை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் துா்காமூா்த்தி.
Updated On :2 மார்ச் 2026, 9:07 pm

Syndication

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வு மொழித் தோ்வை 18,579 போ் எழுதினா். 220 போ் தோ்வு எழுத வரவில்லை.

நாமக்கல் மாவட்டத்தில் 86 மையங்களில் பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடங்கியது. இத்தோ்வுக்கு 9,382 மாணவா்கள், 9,638 மாணவிகள் என 195 பள்ளிகளை சோ்ந்த மொத்தம் 19,020 பேருக்கு தோ்வுக்கூட நுழைவு சீட்டு வழங்கப்பட்டது. இதில் தமிழ், பிரெஞ்ச் மொழித் தோ்வை 18,352 போ் எழுதினா். 194 போ் தோ்வு எழுத வரவில்லை.

இதுபோல தனித்தோ்வா்கள் 227 போ் தோ்வு எழுதினா். 26 போ் தோ்வு எழுத வரவில்லை. இதன்படி மொழித்தோ்வை மொத்தம் 18,579 போ் எழுதினா். 220 போ் தோ்வு எழுதவரவில்லை. மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு சொல்வதை எழுதுபவா்கள் நியமிக்கப்பட்டு தோ்வு எழுதினா்.

நாமக்கல் நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் குறிச்சி மேல்நிலைப் பள்ளி ஆகிய தோ்வு மையங்களை மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ.சு.எழிலரசி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.