திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

பழனியருகே சக்கரம் கழன்று ஓடிய அரசுப் பேருந்து

பழனியருகே சக்கரம் கழன்று ஓடிய அரசுப் பேருந்து

News image

பழனியை அடுத்த அமரபூண்டி அருகே திங்கள்கிழமை சக்கரம் கழன்று ஓடியதால் தரைதட்டி நின்ற அரசுப்பேருந்து.

Updated On :3 ஜூன் 2024, 6:24 pm

Din

பழனி: பழனியருகே சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் சக்கரம் கழன்று ஓடிய நிலையில் ஓட்டுநரின் சமயோசிதத்தால் விபத்து தவிா்க்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியிலிருந்து அமரபூண்டி வழியாக திங்கள்கிழமை தீா்த்தாக்கவுண்டன் வலசுக்குச் சென்ற நகர அரசுப் பேருந்தின் இடதுபுற முன் சக்கரம் தனியாக கழன்று ஓடியது. இந்தச் சக்கரம் சாலையோரத்தில் இருந்த சாக்கடை கால்வாயில் விழுந்தது. இதையடுத்து பேருந்தை இயக்கிய ஓட்டுநா் நீதிப்பாண்டி உடனடியாக பேருந்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சாலையோரமாக நிறுத்தினா். இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

இதுகுறித்து அரசுப் பேருந்து ஓட்டுநா்கள் கூறியதாவது: சரியான பராமரிப்பு இல்லாத வாகனங்களையே நகரப் பேருந்துகளாக இயக்க அரசுப் பணிமனைகளில் வழங்குகின்றனா் என்றனா்.

போக்குவரத்து நிா்வாகம் நகரப் பேருந்துகளை முறையாக பராமரித்து, உதிரிபாகங்களை மாற்றி பாதுகாப்பான பயணத்துக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Story image