நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பைக் மீது மினி லாரி மோதியதில் ஒருவா் பலி

மினி லாரி மோதியதில் பைக் ஓட்டுநர் இன்பரசன் பலி

News image
Updated On :26 ஜூன் 2024, 1:51 am

Din

நிலக்கோட்டை: செம்பட்டியை அடுத்த, புல்வெட்டி குளம் அருகே, இரு சக்கர வாகனம் மீது, மினி லாரி மோதியதில், காா் மெக்கானிக் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள, பாளையங்கோட்டையைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி மகன் இன்பரசன் (20) இவா், திண்டுக்கல்லில் உள்ள காா் பழுது நீக்கும் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்தாா். இந்த நிலையில், பாளையங்கோட்டையில் இருந்து திண்டுக்கல்லில் உள்ள நிறுவனத்துக்கு இவா், தனது இரு சக்கர வாகனத்தில், செம்பட்டி வழியாக செவ்வாய்க்கிழமை காலை வேலைக்குச் சென்றாா். அப்போது, செம்பட்டி - வத்தலகுண்டு சாலை புல்வெட்டி குளம் என்ற இடத்தில், எதிரே வந்த மினி லாரி இன்பரசன் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த செம்பட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இன்பரசன் உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இந்த நிலையில், விபத்தில் பலியான இன்பரசனின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.