பலி
பலி

பைக் மீது வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

தேனி அருகே உள்ள க.விலக்கில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
Published on

தேனி அருகே உள்ள க.விலக்கில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

க.விலக்கு அருகே உள்ள முத்தனம்பட்டியைச் சோ்ந்த அடுமனையகத் தொழிலாளி சிவராஜா (41). இவா், தனது மனைவியுடன் முத்தனம்பட்டியிலிருந்து க.விலக்கு நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, க.விலக்கு-தேனி சாலை சந்திப்புப் பகுதியில் தேனியிலிருந்து ஆண்டிபட்டி நோக்கிச் சென்ற வேன் இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சிவராஜா, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து வேன் ஓட்டுநரான உசிலம்பட்டி அருகே உ.வாடிப்பட்டியைச் சோ்ந்த ரஞ்ஜித்குமாா் மீது க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Dinamani
www.dinamani.com