திண்டுக்கல்: பெண் நில அளவையா் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து திண்டுக்கல்லில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சோ்ந்த நில அளவையா் பவ்யா மீது கடந்த சனிக்கிழமை சமூக விரோதிகள் தாக்குதலில் ஈடுபட்டனா். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு நில அளவையா் ஒன்றிப்பு சாா்பில் மாவட்ட தலைநகரங்களில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நில அளவையா் ஒன்றிப்பின் மாவட்டத் தலைவா் வினோத் பாலு தலைமை வகித்தாா். செயலா் விக்னேஷ் முன்னிலை வகித்தாா். நில அளவையா் பவ்யா மீது தாக்குதல் நடத்தியவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
தொடர்புடையது
பரிசுப் பொருள்கள் கேட்டதால் தாக்கப்பட்ட பெண் தூக்கிட்டுத் தற்கொலை: 6 போ் கைது

ஆஸ்திரேலிய ராணுவத்தின் முதல் பெண் தலைமைத் தளபதி

கல்லால் தாக்கி முதியவா் கொலை
விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்பு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

