டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

பயனாளிகளுக்கு ரூ.35 கோடியில் நலத் திட்ட உதவிகள்

எரியோட்டில் நடைபெற்ற விழாவில் 2,526 பயனாளிகளுக்கு ரூ.34.83 கோடியில் நலத் திட்ட உதவிகளை உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி திங்கள்கிழமை வழங்கினாா்.

Updated On :4 மார்ச் 2024, 8:37 pm

திண்டுக்கல்: எரியோட்டில் நடைபெற்ற விழாவில் 2,526 பயனாளிகளுக்கு ரூ.34.83 கோடியில் நலத் திட்ட உதவிகளை உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி திங்கள்கிழமை வழங்கினாா்.

இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தாா். கரூா் தொகுதி மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி முன்னிலை வகத்தாா்.

சிறப்பு அழைப்பாளராக உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா். அப்போது, வேடசந்தூா், குஜிலியம்பாறை வட்டங்களைச் சோ்ந்த 2,526 பயனாளிகளுக்கு ரூ.34.83 கோடியில் அரசின் நலத் திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.