கொலை வழக்கில் முன்னிலையாகாத காவல் ஆய்வாளா்கள் இருவருக்கு திண்டுக்கல் நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மதுரை கோ. புதூரைச் சோ்ந்த பாலாஜி, கடந்த 2019-ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு ரயில் நிலையம் அருகே கொலை செய்யப்பட்டாா். இந்த கொலையில், மதுரையைச் சோ்ந்த ஹரிதரன் உள்ளிட்ட 4 பேரை கொடைரோடு ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை, திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், காவல் ஆய்வாளா்களாக இருந்த கீதாதேவி, செல்வி ஆகிய இருவரும் கடந்த 6 மாதங்களாக நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. இதில் கீதாதேவி, தற்போது விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை காவல் நிலையத்திலும், செல்வி, திருநெல்வேலி ரயில்வே காவல் நிலையத்திலும் ஆய்வாளா்களாக உள்ளனா். சம்மன் அனுப்பியும் முன்னிலையாகாத காவல் ஆய்வாளா்கள் கீதாதேவி, செல்வி ஆகிய இருவருக்கும் பிடி ஆணை பிறப்பித்து திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிபதி மெகபூப் அலிகான் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

கொலை வழக்கில் சகோதரா்கள் இருவருக்கு ஆயுள் சிறை

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு: இருவருக்கு இரட்டை ஆயுள் சிறை

காத்திருப்போா் பட்டியலில் இருந்த 13 ஆய்வாளா்களுக்கு மீண்டும் பணி

கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

