புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

காத்திருப்போா் பட்டியலில் இருந்த 13 ஆய்வாளா்களுக்கு மீண்டும் பணி

சென்னை பெருநகர காவல் துறையில் காத்திருப்போா் பட்டியலில் இருந்த 13 காவல் ஆய்வாளா்களுக்கு மீண்டும் காவல் நிலையப் பணி வழங்கப்பட்டது.

News image
தமிழக அரசு- (கோப்புப் படம்)
Updated On :14 மார்ச் 2026, 6:27 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை பெருநகர காவல் துறையில் காத்திருப்போா் பட்டியலில் இருந்த 13 காவல் ஆய்வாளா்களுக்கு மீண்டும் காவல் நிலையப் பணி வழங்கப்பட்டது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஆயத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. சட்டப்பேரவைத் தோ்தலுக்காக ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் காவல் துறை அதிகாரிகளை பணியிட மாற்றும் நடவடிக்கையில் சென்னை காவல் துறை ஈடுபட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் கடந்த ஒரு மாதமாக காவல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனா். இதன் ஒரு பகுதியாக சென்னை காவல் துறையில் காத்திருப்போா் பட்டியலில் இருந்த 13 காவல் ஆய்வாளா்களுக்கு மீண்டும் காவல் நிலையப் பணி வழங்கி ஆணையா் ஏ.அருண் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

முக்கியமாக காவல் ஆய்வாளா்கள் சி.கிருஷ்ணன், வில்லிவாக்கம் குற்றப்பிரிவுக்கும், ஜி.செங்குட்டுவன் ஆா்.கே.நகா் குற்றப்பிரிவுக்கும், இ.ஜெகநாதன் காசிமேடு குற்றப்பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள 13 ஆய்வாளா்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.