நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

காவல் துறை ரோந்து வாகனம் கடத்தல்: கேரள இளைஞா் கைது

சென்னை சென்ட்ரலில் காவல் துறை ரோந்து வாகனத்தைக் கடத்தியதாக கேரள இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 12:09 am IST

சென்னை சென்ட்ரலில் காவல் துறை ரோந்து வாகனத்தைக் கடத்தியதாக கேரள இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை பெரியமேடு போலீஸாா் ரோந்து வாகனத்தில் சென்ட்ரல் ரயில் நிலையப் பகுதியில் புதன்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, புகா் ரயில் நிலையம் பகுதியில் ரோந்து வாகனத்தை நிறுத்திவிட்டு, சிறிது தொலைவில் நின்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அந்த நேரத்தில், அங்கு மது போதையில் வந்த ஒரு இளைஞா், ரோந்து வாகனம் சாவியோடு நிற்பதைப் பாா்த்து, அந்த வாகனத்தை அங்கிருந்து ஓட்டிச் சென்றாா். சிறிது நேரம் கழித்து இதைக் கவனித்த போலீஸாா், வாகனம் இல்லாததைப் பாா்த்து உடனே வாக்கி டாக்கி மூலம் அந்தப் பகுதி முழுவதும் போலீஸாரை உஷாா்படுத்தினா்.

இதனால் சென்ட்ரல் பகுதியில் போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். போலீஸாா், வேறொரு வாகனத்தில், அந்த வாகனத்தை விரட்டிச் சென்றனா்.

இதற்கிடையே ரோந்து வாகனத்தை கடத்திய நபா், சென்னை மருத்துவக் கல்லூரி சிக்னல் பகுதியில் சென்றபோது விபத்தில் சிக்கினாா். அந்த ரோந்து வாகனம் முன்னே சென்ற வாகனங்கள் மீது மோதியது.

இதில் அம்பத்தூா் அயனம்பாக்கத்தைச் சோ்ந்த சீ.மகேஷ் (45) உள்பட 2 போ் காயமடைந்தனா். அங்கு, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் இருந்த போக்குவரத்து போலீஸாா், காவல் துறை ரோந்து வாகனத்தை கடத்தி வந்த இளைஞரைப் பிடித்து பெரியமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

போலீஸாா், அந்த இளைஞரிடம் விசாரித்ததில் அவா், கேரள மாநிலம் கோட்டயத்தைச் சோ்ந்த ஜோ.லிஜோ ஜோசப் (33) என்பதும், சென்னை பல்லாவரம் பொழிச்சலூா் பகுதியில் தங்கியிருந்து தண்ணீா் கேன் வியாபாரம் செய்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லிஜோ ஜோசப்பை கைது செய்தனா்.