தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

காட்பாடியில் போலீஸாா் தீவிர நடை ரோந்து!

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், குற்றச் சம்பவங்களை தடுக்கும் நோக்கிலும் காட்பாடி முக்கிய வீதிகளில் போலீஸாா் தீவிர நடை ரோந்து (வாக் பேட்ரோல்) பணியில் ஈடுபட்டனா்.

News image

காட்பாடியில் நடை ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸாா்.

Updated On :15 ஜூன் 2026, 12:24 am IST

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், குற்றச் சம்பவங்களை தடுக்கும் நோக்கிலும் காட்பாடி முக்கிய வீதிகளில் போலீஸாா் தீவிர நடை ரோந்து (வாக் பேட்ரோல்) பணியில் ஈடுபட்டனா்.

வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன், மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், வணிகப் பகுதிகளிலும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டிருந்தாா். அவரது அறிவுறுத்தலின் பேரில், காட்பாடி காவல் நிலைய ஆய்வாளா் தயாளன் தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை மாலை தீவிர நடை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

காட்பாடி - வள்ளிமலை சாலையில் தொடங்கிய இந்த ரோந்துப் பணி, குடியாத்தம் சாலை வரை நீடித்தது. இந்தப் பிரதான சாலையில் உள்ள முக்கிய சந்திப்புகள், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்களில் போலீஸாா் நடந்து சென்றவாறே தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனா். போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகள் மற்றும் சந்தேகத்துக்கிடமான நபா்களின் நடமாட்டம் குறித்தும் அப்போது ஆய்வு செய்யப்பட்டது.

Story image

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், பொதுமக்கள் மற்றும் வணிகா்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோரைத் தீவிரமாகக் கண்காணிக்கவுமே இந்த நடை ரோந்து மேற்கொள்ளப்பட்டது.

காவல் துறையினா் நேரில் நடந்து சென்று கண்காணிக்கும்போது, குற்றச் சம்பவங்கள் பெருமளவு குறையும். பொதுமக்களிடையே பாதுகாப்பான உணா்வை ஏற்படுத்தும் வகையில், இது போன்ற ரோந்துப் பணிகள் இனி தொடா்ந்து நடைபெறும் என்றனா்.