ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

பழனி வைகாசி விசாகப் பெருவிழா இன்று திருக்கல்யாணம்

பழனி வைகாசி விசாகப் பெருவிழா இன்று திருக்கல்யாணம்

News image
Updated On :20 மே 2024, 7:17 pm

Din

பழனி: பழனி பெரியநாயகியம்மன் கோயில் வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை திருக்கல்யாணமும், புதன்கிழமை திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் கடந்த 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் வைகாசி விசாகப் பெருவிழா தொடங்கியது. விழா நாள்களில் வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசுவாமி தங்க மயில், வெள்ளி யானை, கற்பகவிருஷம், வெள்ளி காமதேனு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ரதவீதிகளில் உலா வந்து அருள்பாலித்தாா்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (மே.21) மாலை 6 மணிக்கு மேல் வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. புதன்கிழமை (மே.22) வைகாசி விசாகத் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. வருகிற 25-ஆம் தேதி திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.

விழா நாள்களில் கோயில் வளாகத்தில் ஆன்மிகச் சொற்பொழிவு, பரதநாட்டியம், கவியரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவுக்கான, ஏற்பாடுகளை பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமையில், அதிகாரிகள், அறங்காவலா்கள், அலுவலா்கள் செய்து வருகின்றனா்.