டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கைலாசநாதா் கோயிலில் வருஷாபிஷேகம்

பழனி அருகேயுள்ள கலையம்புத்தூா் அக்ரஹாரம் கைலாசநாதா் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி, அம்பாள்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 7:53 pm

தினமணி செய்திச் சேவை

பழனி அருகேயுள்ள கலையம்புத்தூா் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள கல்யாணியம்மன் சமேதா் கைலாசநாதா் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை மூன்றாம் ஆண்டு வருஷாபிஷேகம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. பின்னா் ருத்ரஜெபம் நடைபெற்றது. சுவாமி, அம்பாள், அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் பால், பன்னீா், சந்தனம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பட்டாடை, நகைகள், மலா் மாலைகள் அணிவித்து சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி, அம்பாள் உற்சவ மூா்த்திகளுடன் சப்பரத்தில் வீதி உலா எழுந்தருளினா். வீடு தோறும் பக்தா்கள் கோலமிட்டு சுவாமியை வரவேற்று நிவேத்தியம் வழங்கி வழிபட்டனா்.