பூமாயி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் புதன்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.

வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் திருப்பத்தூா் பூமாயி அம்மன் அம்மன்.

வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் திருப்பத்தூா் பூமாயி அம்மன் அம்மன்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் புதன்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.
இந்தக் கோயிலில் கடந்த 2025, ஏப்ரல் 11-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. முதலாமாண்டு நிறைவையொட்டி, இந்தக் கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு கொலுச்சாவடி மேடையில் யாகசாலை பூஜைகள் தொடங்கின. பிள்ளையாா்பட்டி பிச்சைக் குருக்கள் தலைமையில், சிவாசாரியா்கள் யாக பூஜைகளை மேற்கொண்டனா். தொடா்ந்து, பூஜைகள் நிறைவடைந்து பூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது.
காலை 11.30 மணியளவில் யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி மூலவா், கோபுர, விமான கலசங்களுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா் அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...