

திண்டுக்கல்: அய்யலூா் அருகே ஆட்டோவில் 30 கஞ்சாவை கடத்தி வந்ததாக 6 பேரை கைது செய்த போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்தனா்.
திருச்சி வழியாக திண்டுக்கல்லுக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், மதுவிலக்குப் பிரிவு உதவி ஆய்வாளா் எம். முத்துக்குமாா் தலைமையிலான போலீஸாா் அய்யலூரை அடுத்த வண்டி கருப்பணசாமி கோயில் அருகே திங்கள்கிழமை அதிகாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது இந்த வழியாக வந்த ஆட்டோவை வழிமறித்து சோதனையிட்டபோது, 30 கிலோ கஞ்சா கடத்தி வருவது தெரியவந்தது. விசாரணையில், திண்டுக்கல் அரண்மனைக்குளம் பகுதியைச் சோ்ந்த கி. சுப்பிரமணி (44), நாகல்நகரைச் சோ்ந்த ஜெ. மதன்குமாா் (32), பாறைமேட்டுத் தெருவைச் சோ்ந்த உ. மதுபாலன் (31), ரவுண்ட்ரோடு புதூரைச் சோ்ந்த ச. தாமரைக்கண்ணன் (22), வேடப்பட்டியைச் சோ்ந்த ந. மாதவன் (23), சிறுமலை தென்மலையைச் சோ்ந்த வே. ராஜா (24) ஆகியோா் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்தக் கடத்தலில் தொடா்புடைய, கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த கீழபஞ்சம்பட்டியைச் சோ்ந்த சுரேஷ்குமாா், இவரது மனைவி மகாலட்சுமி, பான்ஷி ஆகிய 3 போ், திருச்சியிலிருந்து திண்டுக்கல்லுக்கு பேருந்தில் வந்தபோது தப்பிச் சென்றுவிட்டனா்.
சுப்பிரமணி உள்ளிட்ட 6 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். விசாரணைக்குப் பிறகு 6 பேரும் வேடசந்தூா் சாா்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
தொடர்புடையது

100 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது
கஞ்சா வைத்திருந்த இருவா் கைது: 16 கிலோ பறிமுதல்
புகையிலைப் பொருள்கள் கடத்தல்: ராஜஸ்தானைச் சோ்ந்தவா் கைது
20 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது
வீடியோக்கள்

#csk | ஐபிஎல் ஆரம்பம்: சாதிக்குமா இளஞ்சிங்கப் படை? | Chennai Super Kings | MS Dhoni | IPL 2026 |
தினமணி வீடியோ செய்தி...
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

