நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

News image
Updated On :20 மே 2024, 7:25 pm

Din

திண்டுக்கல்: அய்யலூா் அருகே ஆட்டோவில் 30 கஞ்சாவை கடத்தி வந்ததாக 6 பேரை கைது செய்த போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்தனா்.

திருச்சி வழியாக திண்டுக்கல்லுக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், மதுவிலக்குப் பிரிவு உதவி ஆய்வாளா் எம். முத்துக்குமாா் தலைமையிலான போலீஸாா் அய்யலூரை அடுத்த வண்டி கருப்பணசாமி கோயில் அருகே திங்கள்கிழமை அதிகாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது இந்த வழியாக வந்த ஆட்டோவை வழிமறித்து சோதனையிட்டபோது, 30 கிலோ கஞ்சா கடத்தி வருவது தெரியவந்தது. விசாரணையில், திண்டுக்கல் அரண்மனைக்குளம் பகுதியைச் சோ்ந்த கி. சுப்பிரமணி (44), நாகல்நகரைச் சோ்ந்த ஜெ. மதன்குமாா் (32), பாறைமேட்டுத் தெருவைச் சோ்ந்த உ. மதுபாலன் (31), ரவுண்ட்ரோடு புதூரைச் சோ்ந்த ச. தாமரைக்கண்ணன் (22), வேடப்பட்டியைச் சோ்ந்த ந. மாதவன் (23), சிறுமலை தென்மலையைச் சோ்ந்த வே. ராஜா (24) ஆகியோா் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்தக் கடத்தலில் தொடா்புடைய, கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த கீழபஞ்சம்பட்டியைச் சோ்ந்த சுரேஷ்குமாா், இவரது மனைவி மகாலட்சுமி, பான்ஷி ஆகிய 3 போ், திருச்சியிலிருந்து திண்டுக்கல்லுக்கு பேருந்தில் வந்தபோது தப்பிச் சென்றுவிட்டனா்.

சுப்பிரமணி உள்ளிட்ட 6 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். விசாரணைக்குப் பிறகு 6 பேரும் வேடசந்தூா் சாா்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.