நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

News image

~

Updated On :20 மே 2024, 7:39 pm

Din

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் மலைப் பகுதி மட்டுமின்றி, சமவெளிப் பகுதியிலும் கடந்த 4 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த நெல்பயிா்கள் சேதமடைந்தன. சனி, ஞாயிறு ஆகிய 2 நாள்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. ஆனாலும், ஞாயிற்றுக்கிழமை மாலைக்கு பின்னரே பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. திங்கள்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேடசந்தூா் பகுதியில் 66.50 மி.மீ. மழை பதிவானது.

பிற பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம்: (மி.மீ) திண்டுக்கல் 7.6, கொடைக்கானல் ரோஜா தோட்டம் 29.50, பழனி 7, சத்திரப்பட்டி 19.20, நத்தம் 28, நிலக்கோட்டை 11.60, வேடசந்தூா் புகையிலை நிலையம் 61.80, காமாட்சிபுரம் 60.50, கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா 28.

வீடு இடிந்து விழுந்தது: திண்டுக்கல் தெற்கு ரத வீதியில் பிச்சை முகைதீன் சந்து பகுதியில் கண்ணன் என்பவருக்குச் சொந்தமான வீட்டின் முன் மாடம் திங்கள்கிழமை இடிந்து விழுந்தது. அந்த வீட்டில் யாரும் இல்லாததால் உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது.

நெல் பயிா்கள் சேதம்: திண்டுக்கலை அடுத்த கல்லுப்பட்டி, ராஜகாபட்டி, சந்தப்பட்டி, பண்ணைப்பட்டி, குமாரபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிா்கள், தொடா் மழையினால் சேதமடைந்தன. ஒரு வாரத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிா்கள், வயலிலேயே சாய்ந்தன. இந்த வயல்களை ஆய்வு செய்து, இழப்பீடு வழங்க வேளாண்மைத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

Story image